அன்னையார் அபிராமி உபாசகியின் பொன்மொழிகள்:
01. கணவன், மனைவி இருவரினதும் முற்பிறப்பின் தீவினைகளே இப் பிறப்பில் ஏற்படும் குடும்பப் பிரச்சனைகளுக்குக் காரணமாகும்.
02. எமது பாவ வினைகளைத் தீர்ப்பதற்கு நாம் கோயிலைக் கூட்டிக் கழுவிச் சுத்தஞ் செய்துவருதல் நன்று.
03. உங்கள் குருவானவரின் திருப்பாதங்களில் தஞ்சங் கொள்.
04. நீங்கள் குருவானவருக்குச் செய்யும் தொண்டு உங்கள் கர்ம வினைகளைத் தீர்க்கும்.
05. காலையில் தூக்கத்தில் இருந்து விழிக்கும் போதும் இறைவனிடம் அன்றைய பொழுது நல்ல பொழுதாக அமையப் பிரார்த்தனை செய்.
06. இறைவனிடம் உன் கண்ணீரால் உடல் நனையப் பிரார்த்தனை செய். உன் பிரார்த்தனை ஒருபோதும் வீண்போகாது.
07. உன் தியானம் வெற்றியளிக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் பதினொரு தடவைகள் அபிராமி அம்மனின் தியான-மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
08. இறைவழிபாட்டில் ஈடுபடும் போது உடலைச் சுத்தமாகவும், தூய்மையான ஆடையாகவும் அணிந்து கொள்.
09. ஒரு வாரத்தில் ஒரு நாளேனும் கோயிலுக்குச் செல்லல் வேண்டும்.
10. கோயிலுக்குச் செல்லும் போது உடல், மனம், உடைத் தூய்மை இருத்தல் வேண்டும்.
11. நீ மகிழ்ச்சியைத் தேடுகிறாயா? இறைவழிபாட்டில் ஈடுபடு! மகிழ்ச்சி அறிந்து கொள்ளப்படுவாய்.
12. நீ உன்னை உணரக் கற்றுக்கொள்!!! மகிழ்ச்சி தானே கிடைக்கும்.
13. கீட்படித்தல் என்பதும் இறைவனைக் காண்பதே.
14. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிதல் வேண்டும்.
|